யாழ். கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைத்து தருமாறு , கொக்குவில் இந்து மயான அபிவிருத்தி சபையினால் நல்லூர் பிரதேச சபையிடம் கோரப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் நல்லூர் பிரதேச சபை சபா மண்டபத்தில் தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோம்பயன் மணல் மயானத்தில் மாத்திரமே மின் தகன மேடை உள்ளது.
தற்போது கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் , யாழில் உள்ள ஒரு மின் தகன மயானத்தில் சடலங்களை எரியூட்ட முடியாத நிலையில் சடலங்கள், யாழ்.போதனா வைத்தியசாலை , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் தேங்கி காணப்படுகின்றன.
இந்நிலையில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில் புதிதாக மின் தகன மேடை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM