கார்வண்ணன்
போரைப் பொருளாதாரமே தீர்மானிக்கும் என்பார்கள். போரை மட்டுமல்ல, அரசின் உறுதித்தன்மையையும் கூட பொருளாதாரம் தான் தீர்மானிக்கும்.
போரை நடத்துவதற்கு, இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும், பொருளாதாரத்தை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுத்தன.
பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே, போரை நடத்திச் செல்ல முயன்றன. அதில் எல்லா அரசுகளும் தோல்வியையே சந்தித்தன.
பொருளாதாரத்தின் மீது கையை வைத்தால், போரின் தீவிரத்தை தடுக்கலாம் என்று புலிகளால், தெற்கில் உள்ள பொருளாதார இலக்குகள் குறிவைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், பொருளாதாரத்தைக் கவனத்தில் கொள்ளாமல் நடத்திய போரின் விளைவு இப்போதும் அனுபவிக்கப்படுகிறது.
மஹிந்த அரசாங்கம் பொருளாதாரத்தை புறக்கணித்து தொடங்கிய போர், பெரும் அழிவுகளை மாத்திரமன்றி பொருளாதார சீரழிவுகளையும் ஏற்படுத்தியது.
நீண்டகால கடன் அடிப்படையில், வாங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு போர் முடித்து வைக்கப்பட்ட போதும், அந்தக் கடன்கள், மெதுமெதுவாக சூழ்ந்து, இலங்கையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கின்றன.
போர்க்காலத்துக்குப் பின்னர், பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த இலங்கை இப்போது அதனை விட மோசமாக தள்ளாடுகிறது.
வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமல், இறக்குமதிகளை தடுத்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
மத்திய வங்கியும், வணிக வங்கிகளும் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களை வெளியிடுகின்றனவே தவிர, அவர்களிடம் டொலரோ, ஏனைய நாடுகளின் நாணயங்களையோ பெற முடியவில்லை என்று இறக்குமதியாளர்களும், வெளிநாட்டு நாணய மாற்று முகவர்களும் கூறுகிறார்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM