இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2 - 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.
கொழும்பு - ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் பெரேரா 30 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், மார்க்ரம் மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் போர்ச்சுன் 2 விக்கெட்டுகளையும் நோட்ஜே மற்றும் மஹாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 104 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 14.1 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் ஹெய்டன் மார்க்ரம் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 1 விக்கெட்டினை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக 21 ஓட்டங்களையும் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஹெய்டன் மார்க்ரம் தெரிவுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM