சிவலிங்கம் சிவகுமாரன்
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு இலங்கையின் மீது மேற்குலக நாடுகள் தமது பார்வையை அதிகமாக திருப்பியதை மறுக்க முடியாது.அதேவேளை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும்சர்வதேச குழுக்களும் அமைப்புகளும் இலங்கையின் ஊடகப் போக்குக் குறித்து அதிகம்கவனம் செலுத்தத் தொடங்கின. இதற்கு என்ன காரணங்கள் என்பதை விரிவாகக்கூறத்தேவையில்லை.
இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்து குரல்கொடுத்து வரும் இலங்கை சுதந்திர ஊடக இயக்கமானது 2019 ஆம் ஆண்டின் இறுதியில்ஊடகவியலாளர்களுக்கு எதிரான 30 பாரிய குற்றங்களைஅடையாளப்படுத்தி பகிரங்கப்படுத்தினாலும் அதற்கான நீதி இன்று வரை மறுக்கப்பட்டேவருகின்றது.
இந்நிலையில் மேற்படி இயக்கமானது 2020 ஆண்டு ஜனவரிமுதல் டிசம்பர் வரை இலங்கையில் நிலவிய ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களுக்கும் ஊடகநிறுவனங்களுக்கும் , ஊடக பணியாளர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள், அதுதொடர்பான முறைப்பாடுகள் ஆகியவற்றை தொகுத்து ‘இலங்கையில் ஊடக சுதந்திரம் –2020’சம்பவம் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் ஆண்டறிக்கை ஒன்றை அண்மையில்வெளியிட்டிருந்தது.
2021 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி உலகபத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு இதை வெளியிட முயற்சித்தாலும் நாட்டின்சூழ்நிலை காரணமாக முழுமையானதோர் அறிக்கையாக தற்போதே இது வெளியிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் அமைந்துள்ளதெற்காசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ள சட்டத்தரணி விரஞ்சன ஹேரத்கடந்த ஆண்டின் ஊடக போக்குகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நாட்டின் ஊடக சுதந்திரம் பற்றியநிலைமைகளை வருடாந்த அறிக்கையாக கொண்டு வருவதற்கான ஒரு முதல் முயற்சியே இதுவன்றிஇதுவொரு பூரண மதிப்பீடு அல்ல என்று கூறுகிறார் சுதந்திர ஊடக இயக்கத்தின்அழைப்பாளரும் சிரேஷ்ட எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளரான சீதா ரஞ்சனி.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM