(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்)
பாம்பன் அருகே குந்துக்கால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இதனை கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய புள்ளிசுறாவை உடல்கூற்று சோதனை செய்து மணலில் புதைத்தனர்.
உலகிலேயே அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னார்வளைகுடா கடற்பகுதியாகும்.
இந்நிலையில் குந்துகால் கடற்கரையில் சுமார் 1500 கிலோ எடையும் 17 அடி நீளமும் கொண்ட அரியவகை புள்ளிசுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இறந்த புள்ளிசுறா நோய் வாய்ப்பட்டு அல்லது பெரிய அளவிளான சரக்குக்கப்பலின் இயந்திரத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஆழ்கடல்பகுதியில் வசிக்கக்கூடியது எனவும் சங்கு வகைகள் மற்றும் அதிக முட்பகுதிகொண்ட இன மீன்களை உணவாக உட்கொள்ளும் தன்மையுடையது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM