கபில்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில்இன்று ஆரம்பமாகிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மெய்நிகர் கூட்டங்களாகவே இது நடத்தப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்தக் கூட்டத்தொடரில் இரண்டு முக்கியமான விடயங்கள் இருக்கின்றன. ஒன்று 46/1 தீர்மானத்துக்கு அமைய, இலங்கை தொடர்பான முன்னேற்றங்கள் அடங்கிய அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பிக்கவுள்ளார்.
இன்னொன்று ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையின் பின்னரான விடயங்கள்,முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை. அதனை தவிர இலங்கை விவகாரங்கள் ஏதும் முக்கியத்துவம் பெறப் போவதில்லை.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கை தொடர்பாக உள்ளெடுக்க வேண்டிய விடயங்களைச் சுட்டிக்காட்டி ஒரு அறிக்கையை அனுப்புவதற்கு தமிழ்க்கட்சிகள் கடந்த மாதம் 22ஆம் திகதி ஒரு மெய்நிகர் சந்திப்பில் இணங்கியிருந்தன.
அதற்குப் பின்னர், வழக்கம்போலவே தமிழ்க்கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து அறிக்கைகளை அனுப்பியிருக்கின்றன.
சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறிகாந்தா என ஐந்து கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இரா.சம்பந்தனின் கையெழுத்துடன் சுமந்திரனால் வரையப்பட்டு தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இன்னொரு கடிதமும் பச்லெட் அம்மையாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
இனியும் தாமதிக்காமல் பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால், ஒரு கடிதம் அனுசரணை நாடுகளின் குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM