யாழில் 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக்கொலை : இரு உறவினர்கள் திருகோணமலையில் கைது

Published By: Digital Desk 4

12 Sep, 2021 | 09:30 PM
image

யாழ். வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற குறித்த நபரின் உறவினர்கள் இருவரும் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுபானத்தில் நச்சுத்திரவம் கலந்து கணவனுக்கு கொடுத்த மனைவி கைது -  மட்டக்களப்பில் சம்பவம் | Virakesari.lk

ஒருவர் இன்று காலை திருகோணமலையில் கைதுசெய்யப்பட்ட நிலையில் மற்றையவர் தப்பிச் சென்றார். எனினும் 22 வயதான அவரும் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் 30 வயதான  சுப்பிரமணியம் கிருசாந்தன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டார்.

இந்நிலையில் குறித்த கொலையில் ஈடுபட்டவர்களாக உயிரிழந்த நபரின் உறவினர்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள சின்னத்தோட்டம் மதவடி என்ற பகுதியில் தலைமறைவாகி உள்ளதாக காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

தற்போதைய கோவிட்-19 நிலமை காரணமாக அங்கு சென்று சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியாத நிலையில் திருகோணமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலளிக்கப்பட்டது.

திருகோணமலை பொலிஸார் எடுத்த நடவடிக்கையில் 41 வயது சந்தேக நபர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

மற்றையவர் பொலிஸாரின் வருகையறிந்து தப்பியோடிய நிலையில் இன்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரும் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்த குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் திருகோணமலை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17