நாட்டில் நேற்று (11.9.2021) கொரோனா தொற்றால் மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 77 ஆண்களும் 67 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில், 30 வயதுக்கு கீழ்பட்டவர்களில் ஒரு பெண்ணும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 16 ஆண்களும், 05 பெண்களுமாக 21 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 61 ஆண்களும் 61 பெண்களுமாக 122 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,296 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுகவீனம் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நேற்று (11) அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (12) 2ஆம் வட்டாரம், கைவேலி பகுதியை சேர்ந்த 77 வயதுடையவரே மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து மரணமடைந்த நபரை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த மரணத்துடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 15 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM