இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இப் போட்டியானது இன்று மாலை 7.00 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகும்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை கைப்பற்ற, வெள்ளிக்கிழமை ஆரம்பமானது மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது தென்னாபிரிக்கா.
இந் நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் தசூன் சானக்க தலைமையிலான இலங்கை, ஒக்டோபரில் ஆரம்பமாகும் டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக உள்ளூரில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு பாடுபடும்.
அதேசமயம் தென்னாபிரிக்கா, இந்த ஆட்டதிலும் வெற்றி பெற்று, டி-20 தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலடன் காத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM