காண்டாமிருகத்தை தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு பரிசா ?

Published By: Digital Desk 3

10 Sep, 2021 | 01:12 PM
image

காண்டாமிருகங்களை தலைகீழாக தொங்கவிட்டு, அதன் மூலம் விலங்குகளுக்கு என்ன விளைவு ஏற்படும் என்று சோதிக்கும் ஓர் ஆராய்ச்சிக்கு இந்த ஆண்டின் மாறுபட்ட பரிசு ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பரிசின் பெயர் இக்நோபல் (Ig Nobel). இவை வேடிக்கையாக வழங்கப்படுபவை. உண்மையான நோபல் பரிசுகள் அல்ல. அந்த அளவுக்கு பிரபலமாகவும் இல்லை.

கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் வழக்கமாக நடக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இதற்கான விழாவை நடத்த முடியவில்லை. அதனால் அனைத்து வேடிக்கையான காட்சிகளும் இணையத்திலேயே நடந்து முடிந்தன.

"இக்நோபல் பரிசுகள் முதலில் உங்களைச் சிரிக்க வைக்க வேண்டும். பின்னர் சிந்திக்கத் தூண்ட வேண்டும்" என்கிறது இதை வழங்கும் Annals of Improbable Research அறிவியல் நகைச்சுவை இதழ்

போக்குவரத்து இடமாற்றம் தொடர்பான பிரிவில் இந்த ஆராய்ச்சிக்கு இக்நோபல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 காண்டா மிருகங்களை தலைகீழாக 10 நிமிடங்களுக்குத் தொங்கிவிட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கார்னெல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விலங்கு ஆராய்ச்சியாளர் ராபின் ரேட்கிளிஃப், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இந்த ஆராய்ச்சியைச் செய்து பார்த்திருக்கிறார். ஹெலிகாப்டருக்கு அடியில் விலங்குகளைத் தலைகீழாகக் கட்டித் தொங்கிவிட்டால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுமா என்று அறிவதற்காக இதைச் செய்தனர்.

ஆப்பிரிக்காவில் காண்டா மிருகங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றும் பொருட்டு அவற்றை ஹெலிகாப்டரில் தலைகீழாகத் தொங்கிவிட்டு எடுத்துச் செல்வது வழக்கம்.

இருப்பினும், விலங்குகளின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு தலைகீழாக பறக்கும்போது இயல்பாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க யாரும் அடிப்படை ஆய்வைச் செய்யவில்லை என்று ராபின் கூறுகிறார்.

ஹெலிகொப்டர்கள் மூலம் காண்டாமிருகங்களை தலைகீழாகக் கொண்டு சென்ற முதல் நாடு நமீபியா அல்ல. ஆனால் அவர்கள் அதைப் பின்னோக்கிப் பார்த்தார்கள். 'இதை ஆய்வு செய்து கண்டுபிடிப்போம், இது காண்டாமிருகங்களுக்கு உகந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று யோசித்தார்கள் " என்று பிபிசியிடம் தெரிவித்தார் ராபின்.

இந்த அடிப்படையில் ராபினும் அவரது குழுவினரும் நமீபிய நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 12 காண்டா மிருகங்களை கிரேனிலில் தலைகீழாகத் தொங்கிவிட்டு விளைவுகளைப் பதிவு செய்தது.

விலங்குகள் அதைச் சமாளித்தன. உண்மையில், காண்டாமிருகங்கள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட நிலையில் ஒரு பக்கமாகப் படுக்க வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதை விட சிறப்பாகவே இருந்தன. அதனால் தலைகீழாகத் தொங்கவிடப்படுவதே சிறந்தது என்ற முடிவுக்கு இந்தக் குழு வந்தது.

"அதன் காரணம், ஒரு காண்டாமிருகம் அதன் ஒரு பக்கமாக படுத்திருக்கும்போது, இரத்த ஓட்டமானது ஈர்ப்பு விசையால் பாதிக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். வேறுவிதமாகக் கூறுவது என்றால், நுரையீரலின் அடிப்பகுதி அதிக இரத்த ஓட்டத்தைப் பெறுகிறது. ஆனால் மேல்பகுதிக்கு ரத்தம் போதுமான அளவு செல்வதில்லை. அதனால் காண்டா மிருகம் நேராக நிற்பதைப் போன்று, தலைகீழாகத் தொங்கவிடப்படும்போதும் நுரையீரல் சமமான இரத்த ஓட்டத்தைப் பெறுகிறது" என்று விளக்கினார் ராபின்.

இக்நோபல் பரிசுகள் உண்மையான நோபல் பரிசுகளைப் பெற்றவர்களால் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவில் பிரான்சிஸ் அர்னால்ட் (2018 வேதியியல்), மார்ட்டி சால்ஃபி மற்றும் எரிக் மஸ்கின் (2017 பொருளாதாரம்) ஆகியோர் பங்கேற்றனர்.

வெற்றியாளர்களுக்கு ஜிம்பாப்வே நாட்டின் 10 டிரில்லியன் போலியான கரன்சி தாள் வழங்கப்பட்டது.

"இக்நோபல் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டபோது, இது நல்லதா கெட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது 'உங்களை சிரிக்க வைக்கிறது, பிறகு சிந்திக்க வைக்கிறது' என்று நினைக்கிறேன். பூமியில் வாழும் இந்த அற்புதமான விலங்குகளை காப்பாற்ற என்னென்ன முயற்சிகள் நடக்கின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். " என ராபின் தெரிவித்தார்.

"இது உண்மையில் காண்டாமிருக இடமாற்றத்தையும், யானை இடமாற்றத்தையும் மாற்றியுள்ளது. இந்த பெரிய விலங்குகளை தலைகீழாகத் தூக்கிச் செல்வது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எருமை, நீர்யானை மற்றும் ஒட்டகச்சிவிங்கி போன்ற பிற உயிரினங்களில் இந்த ஆராய்ச்சியை நாம் செய்ய வேண்டியிருக்கிறது " என ராபின் குழுவைச் சேர்ந்த பீட் மோர்கெல் என்ற மருத்துவர் தெரிவித்தார்.

ராபின் குழுவைத் தவிர சூயிங் கம்மில் உள்ள பாக்டீரியாக்கள், திரையரங்கில் இருக்கும் காற்று, அரசியல்வாதிகளின் தொப்பை என பல்வேறு மாறுபட்ட ஆராய்ச்சிகளுக்கும் இக்நோபல் பரிசுகள் கிடைத்தன.

பிபிதமிழ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17