“உய­ரிய சில்­லறை விலையை” மீறி அத்­தி­யா­வ­சிய பொருட்­களை விற்­பனை செய்தால் நடவடிக்கை

Published By: Robert

14 Sep, 2016 | 09:54 AM
image

வற்­வரி திருத்­தங்­களின் போது அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான வற்­வரி அதி­க­ரிக்­கப்­ப­டாது. அரசின் “உய­ரிய சில்­லறை விலையை” மீறி அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை விற்­பனை செய்­வோரை கண்­டு­பி­டிக்க நாடு முழு­வதும் விழிப்­புக்­கு­ழுக்கள் சோத­னை­களை மேற்­கொண்டு வருகின்றன என்று அர­சாங்­கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்­பாக ஆராயும் குழு தெரிவித்தது.

கொழும்பில் நிதி­ய­மைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இங்கு வர்த்­தக வாணி­பத்­துறை அமைச்சின் செய­லா­ளரும் அர­சாங்­கத்தின் வாழ்க்கை செலவு தொடர்­பாக ஆராயும் குழுவின் தலை­வ­ரு­மான ரி.வி.கே.பி.தென்­னகோன் மேலும் தெரி­விக்­கையில்,

16அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு வற்­வரி நீக்­கப்­பட்­டது. அது தொடர்ந்தும் அமுலில் இருக்கும். வற்­வரி திருத்­தப்­பட்­டாலும் அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான கட்­டுப்­பாட்டு விலைகள் அரசு தீர்­மா­னித்த உய­ரிய சில்­லறை விலை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இதில் எந்­த­வி­த­மான மாற்­றமும் ஏற்­ப­டாது. எனவே, நாட்டில் தற்­போது அத்­தி­யா­வ­சியப் பொருட்கள், மரக்­கறி வகை­களின் விலைகள் தொடர்­பாக பொய்­யான செய்­தி­களை சிலர் வெளி­யி­டு­கின்­றனர்.

அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான வற்­வ­ரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொய்­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

தற்­போது சுப்பர் மார்க்­கட்­களில் அரசு அறி­வித்த உய­ரிய சில்­லறை விலையை விட குறைந்த விலைக்கு அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை விற்­பனை செய்­கின்­றனர். சந்­தையில் ஏற்­பட்­டுள்ள இப்­போட்டித் தன்மை ஆரோக்­கி­ய­மா­ன­தாக உள்­ளது. இதன் மூலம் மக்­க­ளுக்கு நன்­மைகள் கிடைக்­கின்­றன.

அதே­வேளை, அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களை அதி­க­ரித்து விற்­பனை செய்தால் அது தொடர்பில் 1290 என்ற தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொண்டு நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபைக்கு முறை­யி­டலாம்.

இது வரையில் அதிக விலைக்கு பொருட்­களை விற்ற 85 பேர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான வர்த்­த­கர்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு எமக்கு ஆளணி போதாமல் உள்­ளது.

இது தொடர்பில் அண்­மையில் பிர­த­ம­ருடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போது சுட்­டிக்­காட்­டினோம். தேவை­யான ஆள­ணியை இணைத்துக் கொள்­ளு­மாறு பிர­தமர் ஆலோ­சனை வழங்­கினார். எதிர்­கா­லத்தில் ஆளணி அதி­க­ரிக்­கப்­படும் அதே­வேளை விழிப்புக் குழுக்­களும் அமைக்­கப்­பட்டு அதிக விலைக்கு விற்­பனை செய்­ப­வர்கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வார்கள் என்றார்.

இங்கு ஹெக்டர் ---கொப்­பே­க­டுவ விவ­சாய ஆராய்ச்சி நிறு­வன முக்­கி­யஸ்தர் துமிந்த பிரி­ய­தர்­ஷன குறிப்பிடுகையில் அக்­டோபர் மாதம் நடுப்­ப­கு­தியில் மரக்­கறி வகைகளின் விலைகள் அதிகரிக்கலாம். இது வழமையான விலை அதிகரிப்பாகும். அரிசி விலைகளில் தற்போது குறைப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டரிசியின் விலை ரூபா 10, 15 ஆக குறைந்துள்ளது.

நாட்டுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது. எனவே அரிசியின் விலை அதிகரிக்காது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15