290 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பொப் மார்லி எல்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தேசிய உளவுச் சேவையின் தகவலுக்கு அமைய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் கடற்படையினரும் இணைந்து பேருவளைக்கு அப்பால் உள்ள ஆழ் கடலில் கடந்த மாத இறுதியில் முன்னெடுத்த விஷேட நடவடிக்கையின் போது படகொன்றிலிருந்து 288 கிலோ 644 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதி 290 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட ஐவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
அதன்படி தலாஹேன - மாலபே மற்றும் உடுமுல்ல - பத்தரமுல்லை ஆகிய முகவரிகளை கொண்ட 41 வயதான ' பொப் மார்லி ' என அறியப்படும் களுத்துறை சமிந்த தாப்றூ என்பவரே இந்த விவகாரத்தில் உள்ள உள்நாட்டு பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தலைமையகம் கண்டறிந்தது.
குறித்த சந்தேக நபர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், பொது மக்களினது உதவியையும் நாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM