19 வருடங்களாக தேடப்பட்ட மரணதண்டனை கைதி சிக்கினார் : 3 மனைவிகளுடன் சுகபோகம் 

Published By: Digital Desk 4

08 Sep, 2021 | 08:42 PM
image

நீதிமன்றங்களையும், பொலிசாரையும் 19 வருடங்களாக ஏமாற்றி வந்த மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நபரை, பண்டாரவளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.  

பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த கப்பில பண்டார தர்மசிரி என்ற 48 வயதுடைய நபரே,  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், கடந்த 2002 ஆம் ஆண்டு, மே மாதம் 14 ஆம் திகதி இரவு தமது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றிருந்தார். இது குறித்த வழக்கு பதுளை மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதையடுத்து குறித்த நபரை சந்தேக நபராகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட குறித்த கொலை வழக்கு 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அன்றைய தினம் இவ்வழக்கில், குறித்த சந்தேக நபரை, நீதிபதி கொலைக் குற்றவாளியாக உறுதி செய்து, அந்நபர் நீதி மன்றித்தில் ஆஜராகாமையினாலேயே, அவருக்கு மரண தண்டனையை விதித்தார்.

இம் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர், ஏற்கனவே பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி, தனது பெயரை முழுமையாக  மாற்றிக் கொண்டு , அப்பெயரில் தேசிய அடையாள அட்டையையும் பெற்றுள்ளார்.

கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் தலைமறைவான அவர், புதிய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி கடவுசீட்டினை பெற்று வெளிநாடுகள் பலவற்றிக்கும் சென்று, நாடு திரும்பி, சீதுவை , குருநாகல், வவுனியா ஆகிய இடங்களில் மூன்று பெண்களை திருமணம் செய்து அந்தந்த பகுதிகளில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். 

இக்காலப் பகுதியில் கஞ்சா விற்பனைக் குற்றச்சாட்டில் கேகாலை சிறைச்சாலையில் இந்த நபர் கைதியாக இருந்துள்ளார் அங்கிருந்தும் அவர் தப்பிச் சென்றதாக அந் நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக, பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.  

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர் , விசாரணைகளின் பின்னர், பதுளை மேல்நீதிமன்றில் விரைவில் ஆஜர் செய்யப்படுவாரென, பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47