பிரேஷில் நாட்டின் மொடல் அழகியான கிரிஸ் கேலரா தன்னை தானே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
33 வயதான பிரேஷிலின் மொடல் அழகியான கிரிஸ் கேலரா கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகளால் விரக்தி அடைந்து தனியாக வாழலாம் என்று தீர்மானித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேஷிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் கிரிஸ் கேலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருமணம் குறித்து கிரிஸ் கேலரா கூறுகையில்,
“நான் எப்போதும் எனது வாழ்கையில் தனியாக இருக்க பயம் கொள்வேன். ஆனால் தற்போது என்னை குறித்து மகிழ்ச்சி கொள்ளவேண்டும் என நான் உணர்ந்திருக்கிறேன்.
அதனை உணர்ந்த நிலையில் அதனை கொண்டாட முடிவு செய்தேன். என்னை நானே திருமணம் செய்து கொள்வது அற்புதமாக இருந்தது” என்றார்.
இந்த நிலையில் கிரிஸ் கேலராவின் இந்த முடிவை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
இதற்கு, “என்னை மற்றவர்களிடம் நிரூபிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் அவர்களின் கருத்துகளை பார்ப்பதில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM