சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் எல்லை பகுதிகளில் உள்ள நாணல் காடுகள் கடந்த 3 தினங்களாக எரிந்துகொண்டு இருக்கிறன.
இதனால் குறித்த பகுதியைச் சூழவுள்ள சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரிய நீலாவணை பகுதிகளில் எரிந்த நாணல் கீற்றின் சாம்பல் துகள்கள் விழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஆற்றுப்படுகையில் கடந்த காலங்களில் ஏற்பட்டதைப்போன்று தீவிபத்து மீண்டும் ஏற்பட்டதில் நாணல், மூங்கில் சருகுகள் எரிந்து நாசமாகி வருகின்றன.
மேலும் அருகே எவ்வித குடியிருப்புகளும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அதிகமான பறவைக்குஞ்சுகள் இறந்துள்ளதுடன் பல பறவைகள் இதனால் இடம்பெயர்ந்துள்ளன.
கடந்த 3 தினங்களாக இப்பகுதியில் வீசுகின்ற கடும் காற்றினால் குறித்த நாணல் காடுகள் உராய்விற்குட்பட்டு எரிந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் சில இனந்தெரியாதவர்களினால் பறவை மிருக வேட்டைக்காவும் குறித்த நாணல் காடுகள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு எரிக்கப்பட்டு வருகின்ற நாணல்களில் குடியிருந்த பறவைகள் சரணாலயங்கள் மிக விரைவாக அழிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்பகுதியில் வறட்சி காரணமாக கிட்டங்கி ஆறு வறண்டு காணப்படுகிறதுடன் ஆற்றின் மருங்கில் உள்ள மூங்கில் சருகு நாணல்கள் காய்ந்து காணப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM