அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான 20 ஆண்டுகால போரில் ஆதிக்கம் செலுத்திய நபர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி, ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் தலைவராக ஐ.நா.-ஒப்புதல் பெற்ற முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர்.
அத்தோடு தலிபான்களின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் துணைத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலிபான் நிறுவனர் மற்றும் தலைவரான முல்லா உமரின் மகன் முல்லா யாகூப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் பதவி சிராஜுதீன் ஹக்கானிக்கு வழங்கப்பட்டது,
ஆப்கானிஸ்தானின் சிக்கலான இன அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை அவர்கள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் பெண்கள் உயர் மட்டங்களில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை.
தோஹாவில் தலிபான் பேச்சுவார்த்தையாளரும் முதல் ஆட்சியின் அமைச்சரவையின் உறுப்பினருமான அமீர்கான் முத்தாகி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அத்தோடு மேலும் சில முக்கிய அமைச்சுப் பதவிகளும் இதன்போது வழங்கப்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM