தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்டஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.
இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 67 ஓட்டங்களால் வெற்றிபெற்று இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.
இதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.
இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் சரித்த அசலங்க 47 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
தென்னாபிரிக்க அணி சார்பில் பந்துவீச்சில் கேசவ் மகராஜ் 3 விக்கெட்டுகளையும் ஜோர்ஜ் லின்டி மற்றும் தப்ரய்ஸ் சம்சி ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
204 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
19 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்க அணியின் முதல் 3 விக்கெட்டுகள் சாய்க்கப்பட, அந்த அணி ஓட்டங்களைப் பெறுவதில் தடுமாறியது.
இறுதியில் தென்னாபிரிக்க அணி 30 ஓவரி 125 ஓட்டங்களைப்பெற்று 78 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
தென்னாபிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கென்றிச் கலசின் 22 ஓட்டங்களையும் ஜனிமன் மலன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மகேஷ் தீக்சன 4 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சாமிர மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM