அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தம்  ஏமாற்று வழியில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை - ரணில் விக்ரமசிங்க

Published By: Digital Desk 3

07 Sep, 2021 | 06:28 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமப்பின் 14ஆவது திருத்தம் அரசியலமைப்புக்கமையவே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஏமாற்று வழியில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை என ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமயில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சிறப்புரிமை தொடர்பான கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 14ஆம் திருத்தம் சட்ட  ரீதியிலே நிறைவேற்றப்பட்டது. அத்துடன் குறித்த அரசியலமைப்பு திருத்தும் தயாரிக்கும்போது அந்த அமைச்சரவை குழுவில் நானும் இருந்தேன். அமைச்சரவையில் ஆராய்ந்து, அரசியலமைப்புக்கமையவே 14ஆம் திருத்தம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

அதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். இந்த விடயத்தை தெளிவாக விளங்கி, முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்திலும் வேறு சட்டங்கள் தொடர்பாகவும் சந்தேகம் எழுப்பி பாராளுமன்றத்தின் கெளரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படஇடமிருக்கின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது. சில ஊடகங்களுக்கு இதற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59