(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியலமப்பின் 14ஆவது திருத்தம் அரசியலமைப்புக்கமையவே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஏமாற்று வழியில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை என ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமயில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சிறப்புரிமை தொடர்பான கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 14ஆம் திருத்தம் சட்ட ரீதியிலே நிறைவேற்றப்பட்டது. அத்துடன் குறித்த அரசியலமைப்பு திருத்தும் தயாரிக்கும்போது அந்த அமைச்சரவை குழுவில் நானும் இருந்தேன். அமைச்சரவையில் ஆராய்ந்து, அரசியலமைப்புக்கமையவே 14ஆம் திருத்தம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். இந்த விடயத்தை தெளிவாக விளங்கி, முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்திலும் வேறு சட்டங்கள் தொடர்பாகவும் சந்தேகம் எழுப்பி பாராளுமன்றத்தின் கெளரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படஇடமிருக்கின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது. சில ஊடகங்களுக்கு இதற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM