முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் சுகவீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (07) மரணமடைந்தனர்.
புதுக்குடியிருப்பு மேற்கு மற்றும் தேவிபுரம் பகுதியை சேர்ந்த 42, 84 வயதுடைய இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளவர்களாவர். குறித்த நபர்களுக்கு வேறு எவ்வித நோய்களும் அற்ற நிலையிலே மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அவர்களை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை நேற்றையதினம் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்றையதினம் இடம்பெற்ற இரண்டு மரணங்களுடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 13 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
...
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM