(எம்.மனோசித்ரா)
கிரிபத்கொட, கொம்பனிவீதி, பொரளை மற்றும் மன்னார் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் ஹூணுபிட்டி பிரதேசத்தில் களனி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 12 கிராம் 923 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 202 கிராம் 330 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பவற்றுடன் 35 வயதுடைய ஹூணுபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொம்பனிவீதி பொலிஸ் பிரிவில் கொழும்பு மத்தி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், 8 கிராம் 460 மில்லி கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய கொம்பனி வீதியைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸ் பிரிவில் பொரளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மகசின் வீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 380 மில்லி கிராம் ஹெரோயினுடன் 30 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் பிரிவில் மன்னார் பொலிஸாருக்க கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினுடன் 52 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM