ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பெண் மாதிரிகள் கொண்ட போஸ்டர்கள் சிதைக்கப்பட்டதாக ஆப்கானிய பெண் ஒப்பனை கலைஞருடன் முன்னெடுக்கப்பட்ட பிபிசியின் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலிபான் படையெடுப்பு ஆப்கானிஸ்தான் பெண்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டுள்ளது. அவர்கள் பெரும்பாலும் தலிபான்கள் இல்லாத ஆப்கானிஸ்தானில் வளர்ந்தனர்.
ஆப்கான் பெண்கள் கற்றுக்கொள்ளவும் முன்னேறவும் கடினமாக உழைத்தனர். பாலின சமத்துவத்தை கொண்டு வந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நவீன பெண்ணின் வாழ்க்கையை வாழ்ந்தனர்.
காபூலுக்குள் தலிபான்களின் நுழைவு ஒப்பனை கலைஞர்கள் மற்றும் வரவேற்புரை உரிமையாளர்கள் போன்ற அழகுத் தொழிலில் பணிபுரியும் பெண்களுக்கு பெரும் நெருக்கடியையும் அச்சத்தையும் கொடுத்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
அப்படைவாத இஸ்லாமியக் குழு நகரத்திற்குள் நுழைந்தமை குறித்து 26 வயதான ஒப்பனை கலைஞர் பிபிசியிடம் கருத்து கூறினார். அதாவது அழகுத் துறையில் பெண்கள், குறிப்பாக என்னைப் போன்றவர்கள் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முழு அளவில் எமது தொழிலை முடக்கிக்கொள்ளும்நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும் இந் நிலையானது ஆப்கானிஸ்தானில் அழகுத் துறையின் முடிவு எனவும் குறிப்பிட்டுள்ளார். அழகு வணிகத்தில் உள்ள பெண்கள், வெளியேற முடியாது எதிர்காலத்தைப் பற்றி பேச முடியாத நிலையிலேயே உள்ளனர்.
இப்போதே, குறித்த பெண் கற்பனை செய்த எதிர்காலத்தின் நிறம் அடர்த்தியான கருப்பு வண்ணப்பூச்சுடன் வரையப்பட்டிருப்பதாகவும் வரம்பற்ற அதிர்ச்சியின் நடுவில்உள்ளதாகவும் பிபிசி செய்தி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தன்னை ஒரு நவீன ஆப்கானிய பெண்ணாகக் கருதுகிறார். அவர் சமூக ஊடகங்கள், திரைப்படங்களை நேசிக்கிறார். வாகனம் ஓட்டத் தெரிந்தவர் மற்றும் தொழில் இலட்சியங்களைக் கொண்டிருந்தார். இவ்வாறானதொரு நிலையில் என்றோ ஒருநாள் தலிபான்கள் தன்னை நெருங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
90 களில் பிறந்த அவருக்கு முந்தைய தாலிபான் ஆட்சியின் நினைவுகள் இல்லை. அவர்கள் முதலில் தங்கள் நாட்டில் அழகு நிலையங்களை தடை செய்தனர்.உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அழகு நிலையங்கள் இருந்தன.
2001-ல் தலிபான்களை வீழ்த்திய அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிலிருந்து இரண்டு தசாப்தங்களில், காபூலில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன. நாட்டின் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கானவை இருந்தன என்று பிபிசி அறிக்கை தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM