சுபத்ரா
கொரோனா நெருக்கடிகள், உணவுப்பொருள் விநியோக நெருக்கடிகளுக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ அதிகாரத்துவத்தை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார்.
பைசர் தடுப்பூசிகளை கையாளும் பொறுப்பு சுகாதார அமைச்சிடம் இருந்து விலக்கப்பட்டு, முற்று முழுதாக அது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டில் தற்போதுள்ள ஒழுங்கற்ற நிலையைச் சாட்டாக வைத்துக் கொண்டு இவற்றுக்குள் நுழைக்கப்பட்டிருக்கிறது இராணுவ அதிகாரம்.
உலகின் மிகச்சிறந்த செயற்திறன் மிக்க கொரோனா தடுப்பூசியாக கருதப்படுவது பைசர்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்கின் செயற்திறன் அதிகம் எனக் கூறப்பட்டாலும், பைசர் தான் உலகளவில் பெயர் பெற்றுள்ளது.
இலங்கைக்கு அமெரிக்காவிடம் இருந்து கொவாக்ஸ் திட்டத்தின் கீழ் பைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சீனாவிடம் இருந்து வரையறையின்றிக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற சினோபார்ம் தடுப்பூசிக்குஇணையான அளவில் இல்லாவிட்டாலும், கடந்த இரண்டு மாதங்களில் 1.6 மில்லியன் பைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அவற்றைப் போட்டுக் கொள்வதற்கும் மக்களிடையே ஆர்வம் அதிகம்.
போடப்படும் தடுப்பூசியை யாரும், தேர்வு செய்ய முடியாது என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனாலும், தடுப்பூசி விநியோகத்தில் குழறுபடிகள் நடந்து கொண்டிருப்பதாகவே ஆரம்பத்தில் இருந்து செய்திகள் வெளியாகின்றன.
அவ்வாறான ஆர்வத்தினால் தான், புத்தளத்தில் மருத்துவர் ஒருவர், 18 வயதுக்குட்பட்டசிறுவருக்கும் தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-05#page-3
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM