சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளை தொடங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சமீபத்திய காலங்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முதல் 10 நாடுகளில் ரஷ்யாவும் உக்ரைனும் உள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
தொற்றுநோய்களின் போது, நாட்டுக்கு உக்ரைன் மற்றும் கஜகஸ்தானுடன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் திட்டத்தை இலங்கை செயல்படுத்தியது. அதன்படி கடந்த காலங்களில் 24,320 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
அவர்களில் 250 சுற்றுலாப் பயணிகள் கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் முழுமையாக குணமடைந்த பின்னர் தங்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்னும் சுமார் 100 சுற்றுலா பயணிகள் நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நவம்பர் 4 ஆம் திகதி முதல் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதனால் நவம்பர் 4 இற்கு பிறகு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM