மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய உப்போடை வாவிகரை வீதியில் வாவிக் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றை இனம் தெரியாவர்களால் தீவைத்ததில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி இயந்திர படகு ஒன்றுடன் வலைகள், முற்றாக எரிந்து சாம்பலாகிய சம்பவம் இன்று சனிக்கிழமை (4) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வாவிக்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை வழமைபோல கடலில் மீன்பிடிக்க சென்று காலையில் திரும்பி வந்து இயந்திர படகை கரையில் இயந்திரம் மற்றும் வலைகளுடன் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று பின்னர் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு செல்வதற்காக வந்தபோது படகு தீயில் எரிந்து சாம்பலாகிய நிலையில் இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM