நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையானது தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்படும் அபாயம் உள்ளதோடு மாதமொன்றுக்கு 10 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும் ஊடகக்குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.
நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா மரண வீதமானது இந்தியாவை விட ஐந்து வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெயரளவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கில் 90 சதவீதமான மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தால் மாத்திரமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.
நாடு தற்போது எச்சரிக்கை நிலை நான்கில் உள்ளது. இது சிவப்பு எச்சரிக்கையையும் சமூக பரவலையும் குறிக்கின்றது. மேலும் தென்னாபிரிக்காவில் பரவும் சி12 எனப்படும் புதிய கொரோனா திரிபும் இலங்கையில் பரவும் அப்பாயம் உள்ளது எனவும் அவர் கூறினார்.
வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் வீரகேசரிக்கு வழங்கிய விசேட நேர்காணலை முழுமையாக பார்ப்பதற்கு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM