(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகிறது.
நேற்று வியாழக்கிழமை 202 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 113 ஆண்களும் 89 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9806 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றையதினம் பதிவான மரணங்கள் 202 இல் உயிரிழந்த 115 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். அவர்களில் 87 ஆண்களும் 68 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், 30 வயதிற்கு கீழ் பட்டவர்களில் 2 ஆண்களும் 3 பெண்களுமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 24 ஆண்களும் 18 பெண்களுமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இன்றையதினம் 3644 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 450 537 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 380 166 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 60 767 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM