ஊவா மாகாணத்தில் கொவிட்-19 தொற்றினால், சிகிச்சை பலனின்றி 388 பேர் உயிரிழந்துள்ளதாக, ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதல் இன்றுவரை (3.09.2021) வரையிலான காலப்பகுதியிலேயே, இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
ஊவா மாகாணத்தில் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களே உள்ளன.
இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் 290 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 20 ஆயிரத்து 106 பேர், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொனராகலை மாவட்டத்தில் 98 பேர் கொவிட் 19 தொற்றினால் உயரிழந்துள்ளதுடன், 14 ஆயிரத்து 55 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதுளை மாவட்டத்தில் 290பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 ஆயிரத்து நூற்று ஆறுபேர் தொற்றாளர்களாகவும், மொனராகலை மாவட்டத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 ஆயிரத்து ஐம்பத்தைந்து பேர் தொற்றாளர்களாகவும் இருந்து வருவதாக, ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார். இதனை ஊவா மாகாண மாவட்ட அரச அதிபரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM