நாட்டில் 18-30 வயதுடைய நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் நேற்று மாவட்ட ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 3.7 மில்லியன் நபர்கள் உள்ளனர் மற்றும் இந்த வயதினருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரைந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிக்கையில்,
20-30 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் சுகாதார நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வயது பிரிவில் உள்ள அடைத் தொழிற்சாலை மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் சுமார் 800,000 நபர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே அண்மைய நாட்களில் நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்குவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் கொவிட்-19 தடுப்பு செயலணியில் எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM