(எம்.மனோசித்ரா)
நாட்டில் 20 - 30 வயதுக்கு உட்பட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளை இன்று வியாழக்கிழமை முதல் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொவிட் தொற்று கட்டுப்படுத்தலில் முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது இந்த வயதெல்லைக்கு உட்பட்டோருக்கும் , இதே வயதெல்லையிலுள்ள ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
20 - 30 வயதுக்கு இடைப்பட்டோர் சனத்தொகையில் 3.7 மில்லியன் பேர் தடுப்பூசி பெற தகுதியுடையவர்களாவர்.
இவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக நிறைவு செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒன்றிணைந்த அரச சேவை தாதிகள் சங்கத்தினருடன் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் சங்கத்தின் தலைவர் முருந்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அதற்கமைய கிடைக்கப்பெறும் தடுப்பூசி சிறந்த தடுப்பூசி என்று கருதி எந்தவொரு தடுப்பூசி கிடைத்தாலும் அதனை துரிதமாக பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM