எம்.ஆர்.எம்.வசீம
நாடுபூராகவும் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கு தேவையான ஒக்சீசன் விநியாேகம் தொடர்பில் நாளாந்தம் கண்காணிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடுபூராகவும் கொவிட் கொராேனா நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒக்சீசன்களை விநியோகிப்பது தொடர்பில் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கின்றார்.
அதன் பிரகாரம் கொவிட் நோயாளர்களுக்கு தேவையான ஒக்சீசன் விநியாேகம் தொடர்பில் நாளாந்தம் கண்காணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் ஒக்சீசன் தேவைப்படுகின்ற அனைத்து நோயாளர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் ஒக்சீசனை பெற்றுக்கொடுப்பதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அதற்காக மிகவும் பொருத்தமான நடவடிக்கையை சுகாதார மற்றும் தொழிநுற்ப முறைமை ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் குறித்த அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM