(எம்.மனோசித்ரா)
களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29,900 மெட்ரிக் தொன் சீனி நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை அரசுடமையாக்கப்பட்டதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.
முத்துராஜவெல பகுதியில் அமைந்துள்ள பிரமிட் வில்மர் நிறுவனத்தினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6,200 மெட்ரிக்தொன் சீனி, 809/5, நீர்கொழும்பு வீதி, மாபோல வத்தளையில் அமைந்துள்ள குளோபல் டிரேடிங்க நிறுவனத்தினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,800 மெட்ரிக்தொன் சீனி, 242 உஸ்வட்டகெய்யாவ, வத்தளையில் அமைந்துள்ள குளோபல் டிரேடிங்க நிறுவனத்தினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,100 மெட்ரிக்தொன் சீனி, வில்ஸன் டிரேடிங் நிறுவனத்தின் களஞ்சியசாலை தொகுதி 4 இல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14,000 மெட்ரிக்தொன் சீனி, ஹூணுப்பிட்டி வீதி, கிரிபத்கொட பகுதியில் அமைந்துள்ள ஆர்.ஜி.ஸ்டோர்ஸ் நிறுவனம் பதுக்கி வைத்திருந்த 800 மெட்ரிக்தொன் சீனி என்பன இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சீனித் தொகை கட்டுப்பாட்டு விலையில் அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் சீனிக்காக அறவிடப்பட்ட 50 ரூபாய் என்ற இறக்குமதித் தீர்வை வரியானது, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், 2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் 25 சதமாகக் குறைக்கப்பட்டது. அன்றைய நாளில், நாட்டுக்குள் 88,878 மெட்ரிக் தொன் சீனி காணப்பட்டது.
2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் 2021 ஜூன் 30ஆம் திகதி வரை, 584,000 மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டின் மாதாந்தச் சீனித் தேவையின் அளவு 35,000 மெட்ரிக் தொன் ஆகும்.
இருப்பினும், வருடாந்தச் சீனித் தேவைக்கு மேலதிகமாகச் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டுக்குள் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதான மாயையை உருவாக்கி நுகர்வோரைச் சிரமத்துக்கு உட்படுத்தி அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் முயற்சியொன்று கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டமையைக் காணக்கிடைத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM