வவுனியா செட்டிகுளத்தில் கொரோனா தொற்றால் இளைஞன் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

01 Sep, 2021 | 09:31 PM
image

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கோவிட் தொற்று காரணமாக 25 வயது இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு | Virakesari.lk

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவருக்குக் கடந்த சில நாட்களாகக் காய்ச்சல் இருந்துள்ளது.

இதனையடுத்து குறித்த இளைஞன் நேற்று மாலை (31.08) செட்டிகுளம் வைத்தியசாலைக்குச் சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிட் தொற்றுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு வீட்டில் சென்று குறித்த இளைஞன் தங்கியிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்த 25 வயதுடையவராவார்.

சடலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டக்களப்பு, ஓட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்வதற்காக இராணுவத்தினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37