அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்படுங்கள் - ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

Published By: Digital Desk 3

01 Sep, 2021 | 05:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அவசரகால சட்டத்தை  நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் கொவிட் பெருந்தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்பட்டால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக் கொள்ளலாம் என சுட்டிக்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

2003 ஆம் ஆண்டின் நுகர்வோர் விவகார அதிகாரச் சட்டம் எண் 9 இன் படி அதிகபட்ச விலைகளை பரிந்துரைத்தும் பொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தலைத் தடுக்கவும் சட்டரீதியான அதிகாரங்கள் உள்ளன.

இதனால் ஏதேனும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தடைபட்டால் இதற்கு அரசின் திறமையின்மை மற்றும் தவறான நிர்வாகமே காரணமாகுவதோடு இது பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரநிலை பிரகடனம் தேவைப்படும் ஒரு தொந்தரவு காரணமாக அவசரநிலை என்று அழைக்கப்படுவது வீணாகவும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாகவும் தவறாகவும் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்வாதிகாரத்தை தொடர வேண்டும் என்ற  நோக்கம் அரசாங்கத்திடம் உள்ளது.

அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவசர கால நிலையை உடனடியாக இரத்து செய்து  தொற்றுநோய்களைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளைக் கொண்ட அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று தொற்றுநோய் சூழ்நிலையை கையாளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையை நிறுவ இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி செயல்படுவது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38