(லியோ நிரோஷ தர்ஷன்)
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விஷ ஊசி விவகாரம் குறித்து உரிய வைத்திய பரிசோதணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தமிழ் சட்டதரணிகள் ஒன்றியும் ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது.
மருத்துவ விஞ்ஞானம் மற்றும் சர்வதேச வைத்திய நிபுணத்துவம் கொண்ட குழுவை ஸ்தாபிக்கவும், பாதிப்பிற்குள்ளான முன்னாள் போராளிகளை சோதணையிட அந்த குழுவிற்கு அனுமதி அளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவும், நிபுனத்துவ குழுவின் அறிக்கையை சமர்பிக்கவும் ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போரின் பின்னரான முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வின் போது உடலுக்குள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற விஷ ஊசி விவகாரத்தினால் போராளிகள் பலர் உள மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உள்ளக பொறிமுறைகள் பொறுப்புடமையை வெளிப்படுத்துவதாக இல்லை. உடல் சமநிலையற்று போதல், வலுயிழத்தல், தலைச்சுற்று மற்றும் கண் பார்வை குறைதல் என புனர்வாழ்வு பெற்ற போராளிகள் கடுமையான பாதிப்புகளை எதிர் கொள்கின்றனர்.
விஷ ஊசியை உடலுக்குள் ஏற்றினால் அதனை எளிதில் அடையாளம் காண முடியாது . சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இலங்கை பாதுகாப்பு படைகள் பயிற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இவ்வாறு எதிரானவர்களை மர்மமான முறையில் அழிக்கும் உத்திகளை கற்றிருப்பார்கள்.
ஆகவே தான் வெறும் வைத்தியர்கள் மற்றும் உள்ளடக்காத நிபுனத்துவம் கொண்ட விஞ்ஞானிகளை கொண்ட விஷேட குழுவை பரிந்துரைக்க கேட்டுக் கொள்கின்றோம் என அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM