(ஏ.என்.ஐ)
வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற அரசு சொத்துக்களை ஒப்படைக்குமாறு பொது மக்களுக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய எமிரேட் பாதுகாப்பு அறிவிப்பு: காபூல் நகரில் வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது பிற அரசு சொத்துகள் வைத்திருக்கும் அனைவரும், அந்த பொருட்களை ஒரு வாரத்திற்குள் இஸ்லாமிய எமிரேட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறே இந்த உத்தரவு அமைந்திருந்தது.
தலிபான்கள் முன்பும் இதே போன்ற உத்தரவுகளை பிறப்பித்தனர். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வைத்திருந்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் ஐக்கிய நாடுகள் சபையானது மனிதாபிமான சட்ட மீறல்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய கசப்பான அறிக்கைகளை வெளியிட்டிருந்தது.
தலைநகர் காபூலை கைப்பற்றிய உடனே தலிபான் பயங்கரவாதக் குழு அரச அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு அறிவித்ததுடன் பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை உறுதி செய்தது. ஆனால் பெண்கள் தண்டிக்கப்படுவதை காணக்கூடியதாக இருந்ததாக சர்வதேச அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM