(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆரத்தைக் கடந்துள்ளது. 29 ஆம் திகதி நாளொன்றில் 216 என்ற அதிகளவிலான கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் நேற்று 30 ஆம் திகதி 194 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 9,185 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 100 ஆண்களும் , 94 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 146 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். இதில் 67 ஆண்களும் 79 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, 30 வயதிற்கு கீழ் பட்டவர்களில் 2 ஆண்களும் ஒரு பெண்ணுமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 31 ஆண்களும் 14 பெண்களுமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இன்றையதினம் மாலை வரை 2340 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய இது வரையில் 438 421 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 374 156 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 55 274 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM