(ஆர்.யசி )
நாட்டில் பரவிக்கொண்டுள்ள கொவிட்-19 வைரஸ் பரவளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இருக்கும் ஒரேதெரிவு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது மட்டுமேயாகும். தடுப்பூசியை ஏற்றிக்கொண்டால் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கொவிட் வைரஸ் பரவுவதை 85 வீதத்தால் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் வைத்தியநிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில்ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர இது குறித்து கூறுகையில்,
உலகில் பயன்படுத்தப்படும் சகல அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளும் வைரஸ்பரவளில் இருந்து பாதுகாப்பை கொண்டுக்கின்றது. அதுமட்டும் அல்ல முறையாக இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டால் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் கடத்தப்படும் செயற்பாடும் 85 வீதத்தில்குறைவடைகின்றது என அவர் கூறினார்.
இது குறித்து இலங்கை வைத்தியர்கள்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்னகூறுகையில்,
கொவிட் வைரஸ் பரவளில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள எமக்கு இருக்கும் ஒரே தெரிவுதடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதாகும். அதனையே சகலரும் வலியுறுத்தி வருகின்றோம். அதேபோல் எந்ததடுப்பூசி வேண்டும் என்ற தெரிவுகள் அவசியமற்றதாகும். மூன்றாம் தடுப்பூசி குறித்து உலக நாடுகள் கவனம்செலுத்தி வருகின்றனர். அது குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். ஆனால் சகலருக்கும் மூன்றாம்தடுப்பூசி அவசியமாகுமா என்றால் அதற்கான தேவை இல்லை என்றே நான் கூறுவேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM