(இராமேஸ்வரத்திலிருந்து ஆ .பிரபுராவ்)
காவேரி நதி நீர் தொடர்பாக தமிழகம், கர்நாடகமாநிலம் மீது குற்ற நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.
இவ் வழக்கின் தீர்ப்பு கடந்தவாரம் தமிழகத்திற்கு காவேரி நீர் திறக்கக்கோரி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து தமிழகத்திற்கு எதிராக கர்நாடக மக்கள் போராட்டம், கடையடைப்பு, மறியல் போராட்டம் மற்றும் தமிழக முதல்வரின் உருவப்பொம்மை எரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் சமூகவலைத்தளத்தில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவொன்றை இட்டிருந்தார். இதனை அறித்த கர்நாடக மாநில இளைஞரொருவர் குறித்த பதிவையிட்ட இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து உலக பிரசித்திபெற்ற இரமேஸ்வரம் கோயிலுக்கு இன்று காலை வருகை தந்த கர்நாடக யாத்திரீகர்கள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனம் மீதும் தமிழ் அமைப்புக்கள், நாம் தமிழர் கட்சியினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழர் தேசிய முன்னணியினர் தாக்குதல் மேற்கொண்டனர்.
இத் தாக்குதலால் ஒரு வேன், 3 கார் மற்றும் இரு சொகுசு போக்குவரத்து பஸ் ஆகியன பலத்த சேதமடைந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் இராமேஸ்வரம் பொலிஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM