( எம்.எப்.எம்.பஸீர்)
போலியாக தயார் செய்யப்பட்ட ஊரடங்கு அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்பட்டு வருகின்றமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளுக்கு விஷேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போலியான ஊரடங்கு அனுமதிகளுடன், குற்றச் செய்ல்களில் ஈடுபடும் சிலர் சில பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோதனைச் சாவடிகளிலும் ஏனைய இடங்களிலும் நபர்களை சோதனைக்குட்படுத்தும் போது அவர்களது அனுமதிப் பத்திரம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.
போலியான ஊரடங்கு அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தி செயற்படுமாறு அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட விதிகளை, போலியான அனுமதிப் பத்திரங்களைக் கொண்டு மீறியவர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM