கொவிட் உயிரிழப்பு தரவுகளில் பாரிய வேறுப்பாடு : அரசாங்கம் உண்மையைக் கூற வேண்டும் - மரிக்கார்

Published By: Digital Desk 4

31 Aug, 2021 | 10:24 AM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியிலுள்ள எமது கட்சி அலுவலகங்களின் ஊடாகத் திரட்டிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது தற்போது அரசாங்கத்தினால் வெளியிடப்படும் கொவிட் - 19 தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் உண்மையான தரவுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளதை அவதானிக்கமுடிவதாகத் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

Articles Tagged Under: நம்பிக்கையில்லாப் பிரேரணை.எஸ்.எம்.மரிக்கார் |  Virakesari.lk

அத்தோடு அரசாங்கம் உண்மையான தரவுகளை வெளியிடும் பட்சத்திலேயே பொதுமக்கள் தொற்றுப்பரவலின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்டு அவதானத்துடன் செயற்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தன்மையை உணர்ந்துகொண்டு, உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி வீடுகளில் இருக்கவேண்டும் என்பதற்காகவே இப்போது நாடு முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றது. 

அவ்வாறெனின், தடுப்பூசி வழங்கல் தொடர்பில் உரியவாறு தரவுகள் வெளியிடப்படுவதைப்போன்று, கொவிட் - 19 தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்பிலும் சரியான தரவுகள் வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள எமது கட்சி அலுவலகங்களின் ஊடாகத் திரட்டிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது தற்போது அரசாங்கத்தினால் வெளியிடப்படும் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் உண்மையான எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளதை அவதானிக்கமுடிகின்றது. ஆகவே உண்மையான தரவுகளை வெளியிடுவதன் ஊடாகவே பொதுமக்கள் அதன் பாரதூரத்தன்மையை விளங்கிக்கொண்டு மேலும் அவதானத்துடன் செயற்படுவர்.எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08