புதிய தலைமுறையினருக்கு என்றும் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பவர் எம் பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார் அன்னாரின் 108 வது ஜனன தினத்தில் எமது சமூக மேம்பாடு மற்றும் எமது நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும் அவர் காட்டிய வழியில் ஒரு சமூகமாக நாம் முன்னின்று செயல்படுவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது சமூகம் 3 தசாப்தங்களாக நாடற்றவர்கள் ஆகவும் அபிவிருத்தி கல்வி சுகாதாரம் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாகவும் நாம் வாழ்ந்தோம். எம் மக்களுடைய விடாமுயற்சி மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் தலைமைத்துவம் இன்று இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச அளவில் சாதனைகளைப் புரிய கூடிய அளவிற்கு எமது இந்திய வம்சாவளி சமூகம் முன்னேறிய உள்ளது என்று என்பது மறுக்க முடியாத உண்மை.
இவரைப் போன்ற சாணக்கிய தலைவர்கள் எம்மை வழி நடத்தியதன் ஊடாகவே நாம் இன்று ஏனைய சமூகங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உயர்ந்த உள்ளம் ஆகவே அவருடைய அகிம்சா வழி சாணக்கியம் மக்கள் அன்பு மற்றும் சமூக மேம்பாடு இன்று வரும் எமது இளைய தலைமுறையினரும் பின்பற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் எமது சமூகத்தின் வளர்ச்சி மட்டுமல்லாது எமது நாட்டினுடைய வளர்ச்சியிலும் நாம் பங்கெடுக்க வேண்டும். இவரது 108வது ஜனன தினம் எம் அனைவருக்கும் ஒரு மகத்தான நாள் என பாரத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM