ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் நெல் வயலில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் ஒரு கைக் குழந்தை உட்பட நான்கு பேர் அனர்த்தத்தில் காயமடைந்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று மாலை பாசியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜக்ஜோர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
துர்கா சிங் (வயது 45) மற்றும் அவரது மகள் புஷ்பா குமாரி (வயது 18) ஆகியோர் வயலில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
துர்கா சிங்கின் மனைவி சகோதரா தேவி, புதவிகளான பாரதி குமாரி (வயது8), புனிதா குமாரி (வயது5) மற்றும் இரண்டு மாத கைக்குழந்தை ஆகியோரே அனர்த்தத்தில் காயமடைந்த ஏனையவர்கள் ஆவர்.
அவர்கள் உடனடியாக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM