நுவரெலியா பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் இயற்கை வனப்பகுதியில் உள்ள 30 மீட்டர் உயரமான லவர்சிலிப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து நேற்று (28) மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர பிரதேசங்களான ஆவாஎலிய, மஹிந்த மாவத்தை, லவர்சிலிப் தோட்டம், பீட்ரூ தோட்டம் மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரதேசம் ஆகிய பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான தண்ணீர் தாங்கியில் இந்த சடலம் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆவாஎளிய பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கொல்லா என்று அழைக்கப்படும் நமசிவாயம் அமிர்தலிங்கம் (வயது 42) என நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் நீர் தாங்கியின் இடுக்கில் சிக்கியுள்ள நிலையில் சடலத்தை மீட்கும் பணியை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பிரதான தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேவேளை சடலம் கிடக்கும் பிரதான தாங்கியிலிருந்து மக்கள் குடிநீர் பாவனைக்காக வெளியேரும் தண்ணீரை உடனடியாக தடைசெய்துள்ள பொலிசார் பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன் இக் குடிநீர் பாவனையை தற்காலிகமாக நிறுத்தி கொள்ளுமாறு பிரதேச மக்களுக்கு விசேட அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வீடு உடைப்பு சம்பவம் ஒன்றில் நுவரெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் நுவரெலியா நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM