எம்.எப்.எம்.பஸீர்
ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சிக்கு சவால்கள் விடுக்கப்படும்போது, உயர் நீதிமன்றில் என்றும் போராடும் ஒரு போராளி. ஊடகங்கள் முன்னிலையில் தோன்றாத,ஆனால் ஊடகங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்ற ஒரு பெயர். ஒடுக்கப்பட்டோரின், குரலற்றவர்களின்குரல்.
அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக தனது கணவருடன் சேர்ந்துநீதிமன்ற படிகளேறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுத்த வழக்குகள் ஏராளம்.
பல சமயம், வழக்குகளின் போது, தனது சேவை பெறுநருக்காகதானே மனுதாரராக முன்னின்று நீதிக்காக போராடிய ஓர் நீதி தேவதை. அந்த நீதி தேவதையை இன்றுஇழந்து தவிக்கிறது தேசம்.
ஆம், சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா. ஆசியாவில் தலை சிறந்த நூறுசட்டத்தரணிகளில் ஒருவரான கௌரிசங்கரி தவராசா, 35 வருட நீதிச் சேவையில் பயணித்துக்கொண்டிருந்தபோது,கடந்த 23 ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி, யாழ்.அளவெட்டியில் சண்முகசுந்தரம் - யமுனா தேவிதம்பதியினருக்கு மகளாக கௌரிசங்கரி பிறந்தார். யாழ்.மகாஜன கல்லூரியில் தனது பாடசாலைக்கல்வியை நிறைவு செய்த கௌரிசங்கரி, இலங்கைச் சட்டக் கல்லூரியில் தனது சட்டக் கல்வியைபூர்த்தி செய்து 1987 ஜூன் முதலாம் திகதி உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார். இதனைவிட, இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் சட்டஇளமானி பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார்.
சட்டக்கல்லூரியில் கல்வி கற்கும் வேளையில், சக சட்டத்துறை மாணவனாக இருந்தயாழ்.புங்குடு தீவை சேர்ந்த கே.வி.தவராசாவை மனம் விரும்பி திருமணம் செய்துகொண்டார்கௌரிசங்கரி தவராசா.
தனது கணவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவுடன் இணைந்து, நீதி, நியாயம்,மனித உரிமைகள், ஜனநாயகம் சட்டத்தின் மீதான ஆட்சிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரிதவராசா முன்னெடுத்த மகத்தான சேவைக்கு கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகங்கள் சாட்சிகளாகும்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-29#page-4
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM