இலங்கை மதச்சார்பில்லாத நாடு என்ற மேற்குலகத்தின் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை கிடையாது எனத் தெரிவித்துள்ள கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையின் அரசியலமைப்பின் 9 ஆவது ஷரத்து நீக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் திரு இருதயநாதர் தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆண்டகை அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கை மதச்சார்பில்லாத நாடு என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டுமென்றும் அதனை புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்க வேண்டுமென்றும் மேற்குலக நாடுகளின் கொள்கை எம்மீது திணிக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இதனை நாம் நிராகரிக்க வேண்டும். மதம்இ கலாசார விழுமியங்களை கடைப்பிடித்த வாழ்வின் காரணமாகவே இலங்கையில் ஒழுக்க விழுமியங்களுக்கான சமூக கட்டமைப்பு உருவாகியுள்ளது.
எனவே மதச்சார்பற்ற நாடு எங்களுக்கு பொருத்தமானதல்ல. 2600 வருடங்களுக்கு மேலான மதக் கலாசாரம் எமக்கு உள்ளது. அதனை நீக்குவது சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும்.
அதேவேளை அரசியலமைப்பின் 9 ஆவது ஷரத்து தொடர்ந்தும் பாதுகாப்பதாக žஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இதனை வரவேற்கின்றோம்.
அதாவது இலங்கை ஜனநாயக குடியரசின் அதி முக்கியம் வாய்ந்த இடத்தை பெளத்த மதத்திற்கு வழங்கி அதனை போசிப்பது பாதுகாப்பது அரசின் முக்கிய கடமையாகும்.
அதேவேளை, ஏனைய மதங்களையும் அரசு பாதுகாக்கும் என்ற ஷரத்து இலங்கையின் அரசியலமைப்பில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM