கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
குறித்த தடுப்பூசிகளை ஏற்றி வந்த விமானம் இன்று பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
கொவெஸ் செயற்திட்டத்தின் ஊடாக 100 000 பைசர் தடுப்பூசிகள் அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்த இந்த தடுப்பூசிகளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை காணப்படுவதால் , இவ்வாறு தக்க தருணத்தில் உதவியமைக்கு அமெரிக்காவிற்கு சுகாதார அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
இந்த காலப்பகுதியில் அமெரிக்க மக்கள் எமக்கு வழங்கியுள்ள உதவிகள் மதிப்பிட முடியாதவை.
கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கான சேவைகளை வழங்குகின்றமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் , 2021 இறுதிக்குள் சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் , கடந்த 26 ஆம் திகதியாகும் போது நாட்டு சனத்தொகையில் 25 சதவீதமானோருக்கு முழுமையான தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
கொவிட் தொற்று கட்டுப்படுத்தலில் அமெரிக்காவின் உதவி தொட்ச்சியாக தேவைப்படுவதன் அவசியத்தை அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM