(எம்.மனோசித்ரா)
வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசி அட்டை வழங்கப்படும். சுகாதார அமைச்சின் இணைதளத்தினூடாக விண்ணப்பிப்பதன் மூலம் 5 - 7 நாட்களுக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது சாதாரண தடுப்பூசி அட்டைகளே நாட்டில் வழங்கப்படுகின்றன. எனவே வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு அது பாதுகாப்பற்றது என்பதால் இலத்திரனியல் தடுப்பூசி அட்டையை வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த அட்டையின் ஊடாக எந்த போலியான விடயங்களையும் முன்னெடுக்க முடியாது.
சுகாதார அமைச்சின் இணையதளத்தினூடாக விண்ணப்பிப்பதன் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும். கடந்த புதன்கிழமை இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
24 மணித்தியாலங்களுக்குள் இலத்திரனியல் தடுப்பூசி அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு 1000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சரியான தகவல்கள் வழங்கப்பட்டால் மாத்திரமே அதனைப் பெற்றுக் கொள்ள முடியும். வழங்கப்படும் தகவல்கள் உண்மையானவையா என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் , அது குறித்த மேலதிக தகவல்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM