(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்று பரவலால் நாட்டில் பாரதூரமானதொரு தேசிய அனர்த்தம் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதன் உள்ளக முரண்பாடுகளை புறந்தள்ளி, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரசாங்கத்தின் மீது என்ன நம்பிக்கை இருக்கிறது? கொவிட் நிதியமொன்றை ஸ்தாபித்தனர். சீனியின் மூலம் கோடிக் கணக்கில் இலாபம் ஈட்டினார்கள். இதேபோன்று மேலும் பல ஒப்பந்தகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர்.
ஆனால் மக்களுக்கு கிடைக்கும் சலுகை எதனையும் நாம் அவதானிக்கவில்லை. தடுப்பூசியைக் கூட மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு கூட முடியாமலுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. பி.சி.ஆர், அன்டிஜன், ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் என்பவற்றின் மூலம் வருமானமீட்டுகின்றனர்.
இவ்வாறிருக்கையில் எமது ஊதியத்தை அவர்களுக்கு வழங்குவதற்கு நம்பிக்கை ஏற்படுமா? எனவே தான் அரசாங்கம் கொவிட் நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னரே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் எதிர்க்கட்சி சகல வைத்தியசாலைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. நோயாளர்களுக்கும் , பொது மக்களுக்கும் உதவியளிக்கப்பட்டுள்ளன. எமக்கு எமது தலைவர் மீது நம்பிக்கை இருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM