(இராஜதுரை ஹஷான்)
பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக சுற்றாடற்றுறை அமைச்சு 2021 தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ தேசிய செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றாடற்றுறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் இந்த தேசிய செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றாடற்றுறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்துவ தேசிய செயற்றிட்டத்திற்காக ஜப்பான் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் செயற்றிட்டம், சுற்று சூழல் மற்றும் சூழல் தொழிநுட்பத்திற்கான நிறுவனம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன.
விசேடமாக '3 ஆர்' செயற்றிட்ட கொள்கைக்கு அமைய பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பிளாஸ்டிகை மீள்சுழற்சி செய்தல் மற்றும் மீள் பாவனை ஆகிய முறைமைக்கு அமைய பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வது தேசிய செயற்றிட்டத்தில் இலக்காக காணப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு மாத்திரம் சுமார் 3 இலட்சம் மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அத்துடன் நாட்டுக்குள் மாத்திரம் ஒரு நாளைக்கு 10,768 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் சூழலுக்கு அகற்றப்படுகின்றன.
அத்துடன் உள்ளூராட்சிமன்ற சபைகளினால் ஒரு நாளைக்கு மாத்திரம் சுமார் 3458 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிக்கப்படுகின்றன.
இதற்கமைய நாட்டில் நாளாந்தம் 50 சதவீதமான பிளாஸ்டிக் கழிவுகள் முறையற்ற வகையில் சுற்றுச்சூழலில் கலக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
10 வருட காலத்திற்குள் பிளாஸ்டிக்வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தேசிய செயற்றிட்டத்தின் பிரதான எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM