(எம்.மனோசித்ரா)
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஒட்சிசன் தேவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் , குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள நடமாடும் ஒட்சிசன் தொகுதியை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று புதன்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள நடமாடும் ஒட்சிசன் தொகுதி தற்போது மிக தொகுதி தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், ஒட்சிசன் தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதால் இந்தியா இதில் அதிக கவனம் செலுத்தும் என்று நம்புவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
கொவிட் பேரழிவைத் தணிப்பதில் இரு நாடுகளும் ஒரு சவாலை எதிர்கொள்கின்றன என்றும், நட்பு நாடுகளாக இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவாலான முறைகள் குறித்த நடைமுறை அறிவைப் பரிமாறிக் கொள்வது மிக முக்கியம் என்றும் இந்திய உயர் ஸ்தானிகர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM